Wednesday 16 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆

 


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..(15.12.'20)


'மாதங்களில் நான் மார்கழி' என்று கண்ணன் கீதையில் கூறியிருப்பதிலிருந்தே இந்த மாதத்தின் புனிதத்தன்மை உணரப் படுகிறது. மார்கழி இம்முறை 29 நாட்களே இருப்பதால் இன்று முதல் திருப்பாவை, திருவெம்பாவை ஆரம்பம்.


ஆண்டாளும் மார்கழி மாதத்திலேயே பாவை நோன்பு  நோற்கிறாள்.மாணிக்க வாசகரின் திருவெம்பாவைப் பாடல், மற்றும் திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் சிவன் கோயில்களிலும், ஆண்டாளின் திருப்பாவையும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளிஎழுச்சியும் வைணவத்திருக்கோயில்களிலும் பொழுது புலருமுன் மக்களைத் துயிலினின்றும் எழுப்பி தெய்வீகத்தை நிறைத்து ஊரெங்கும் பக்தி மணம் பரவச் செய்கின்றது. ஆண்டாளின் திருப்பாவை  பாடல்கள், கேட்கத் தெவிட்டாத மனம் மயக்கும் பாசுரங்கள் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

என் மகள் போட்ட இன்றைய கோலமும்..விளக்கமும்..

This Margazhi... bringing to you different types of Rangolis and their significance all over India...Today’s special is chukkalu leni muggulu... rangoli without dots from Andhra.

These designs are made without dots. They are similar to free hand drawings of lines and curves, but use occasion specific elements to make different muggu patterns.


No comments:

Post a Comment