Saturday 26 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..21.12.'20

 



பெரியாழ்வார் துளசிச் செடியின் கீழிறந்து எடுத்து வளர்க்கப்பட்ட குழந்தையை தம் சொந்தப் பெண்ணாய் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார்.‌அவளுக்கு கோதை எனப் பெயரிட்டார்.

இளம் வயதிலேயே, தனக்குத் தெரிந்த சமயம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் தமிழ்மொழி போன்ற அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். 

இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவளாயும் தமிழ்த்திறமை கொண்டவ

ளாகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டாள். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தாள். 

கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவிடுவாள். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூட்டப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டு, அவள் சூடிய மாலையை நீக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். 

அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உவப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும் 'இறைவனையே ஆண்டவள்' என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

இன்றைய நிவேதனம்..அவல் முப்பருப்பு பொங்கல்


No comments:

Post a Comment