Saturday 19 December 2020

🕉️ மகத்தான_மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..19.12.'20

 





🕉️ #மகத்தான_மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..19.12.'20

வட இந்தியாவில் 

ராதையின் பக்தி பிரபலமாக போற்றப்படுகிறது. பெண் பக்தைகளில் மீராபாய் 

கண்ணனிடம் கொண்ட  ஆழ்ந்த பக்தியைப் போல தமிழகத்தில் ஆண்டாளின் பக்தி போற்றப்படுகிறது. 

இவரது  30 பாடல்களைக் கொண்ட திருப்பாவையில் கோதை  தன்னை  கோபிகையாக உருவகப் படுத்தி கண்ணனின் திருவடியை அடைதலையே தன் வாழ்வின் இலட்சியமாகப் பாடியுள்ளாள்.

108 வைணவத் தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம்  ஆண்டாளின் பெருமை பேசும் சிறப்பான கோவில்.   அனைத்து வைணவக் கோவில்களிலும் ஆண்டாளுக்கு தனிச் சன்னதி மட்டுமே உண்டு. இங்கு மட்டுமே தனிக் கோயில்  அமைந்துள்ளது. 

நாச்சியார் என்ற பெயரில் பன்னிருஆழ்வார்களில், ஒருவராக ஆண்டாள் இருந்தாலும், தமிழகத்தில் அவள் ஒரு பெண் தெய்வமாகவே வழிபடப்

படுகிறாள். அவளது பிறந்த நாளான ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

இன்றைய நிவேதனம்..தினை தக்காளி பொங்கல்


No comments:

Post a Comment