Tuesday 29 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..29.12.'20

 





🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..29.12.'20

ஸ்ரீதத்த  ஜெயந்தி

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரின் அம்சமே என்பதை உலகுக்கு உணர்த்துவதே தத்தாத்ரேய அவதாரம்.

தத்தாத்ரேயர் அனுமன் போல் சிரஞ்சீவியாவார்.

அத்திரி முனிவரும் அவர் மனைவி அனுசூயாவும் காட்டில் வசித்தபோது, அனுசுயா தனக்கு மும்மூர்த்திகளே குழந்தைகளாகப் பிறக்க வேண்டினாள்.

இதை அறிந்த மும்மூர்த்தியரும் தம் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். தாமே கற்பில் சிறந்தவர்கள் என்ற பெருமையில் இருந்த முத்தேவியர் அவளுக்கு சோதனை வைத்து அதில்  அவள் வெற்றி பெற்றால் அவள் கேட்டபடி நடக்கலாம் என்றனர். அவள் தோற்று விடுவாள் என எண்ணினர்.

மும்மூர்த்திகளும் துறவி வடிவில் ஆசிரமம் வந்து அவளை நிர்வாணமாக உணவிட வேண்டினர். ஒரு நிமிடம் துணுக்குற்ற அனுசுயா தம் கற்பின் மீது நம்பிக்கை வைத்து,  கணவருக்கு பாதபூஜை செய்த நீரை மும்மூர்த்திகள் மேல் தெளித்து அவர்களை குழந்தைகளாக வேண்டினாள். அத்துடன் அவர்களுக்கு புகட்ட பால் வர வேண்டினாள். பின் அவர்கள் வேண்டியபடி உடலில் ஆடையின்றி பால் புகட்டினாள்.

வீடுகளில் திரும்பிய அத்திரி முனிவர் அனுசுயா சொன்னவைகளைக் கேட்டு, மூன்று குழந்தைகளையும் சேர்த்து அணைக்க, ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

இவ்விஷயம் அறிந்த மூன்று தேவியரும் அனுசுயாவின் வீட்டுக்கு வந்து தம் கணவரை பழைய வடிவில் திருப்பித்தர வேண்ட, அத்திரி, 'குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்' என்றார். 

உடன் மும்மூர்த்திகளும் சுய வடிவம் பெற்று, 'உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான்' என்று கூறி மறைந்தனர்.

இவரது அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக மும்மூர்த்தி ரூபமாக  அங்கே இறைவன் காட்சி தருகிறார்.

வடமாநிலங்களில் குரு என்பது தத்தரையே குறிக்கிறது. அலகாபாதில் இவருக்கு தனி ஆலயம் உண்டு.

ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே நம் பாவங்கள் அனைத்தும் விலகுவதோடு,  இவரை  உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும் மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை!

இன்று தத்தாத்ரேய ஜயந்தி. நாமும் அவரை வேண்டி ஞானம் தர வேண்டுவோம்🙏

இன்றைய கோலம் சிக்குக் கோலம்.

நிவேதனம் சாமை பொங்கல்

No comments:

Post a Comment