Saturday 26 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..22.12.'20




பெரியாழ்வார்  ஆண்டாளைப் பூமிப் பிராட்டியாகவே கருதலானார். சூடிக் கொடுத்த நாச்சியாரும் மார்கழி நீராடி, மாதவனை எண்ணி நோன்பு இருந்து, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாடி அருளினாள். 

மணப்பருவம் எய்திய ஆண்டாள் 'திருமால் தவிர வேறொருவரையும் மணக்க விரும்பவில்லை' என்று கூறுவதைக் கேட்டு மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.

ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு, '108 திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை மணக்க விரும்புகிறாய்?'என மகளிடம் கேட்டார். அவர்கள் குண நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். 

அதற்கு இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம், தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர், திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார். 

இவற்றுள் ஸ்ரீரங்கம் அழகிய மணவாளனின் கண்ணழகு, குழலழகு ஆகியவற்றால் கவரப்பட்ட கோதை அவரையே தன் மணாளராக விரும்பி

அன்று முதல்  ஸ்ரீரங்கப் பெருமானை மணப்பது போல் கனவு காணலானாள். பெரியாழ்வாரோ'இதெல்லாம் நடக்குமா?' என்று கவலைப் பட்டார்.

இன்றைய நிவேதனம்..கல்யாணப் பொங்கல்

இன்றைய கோலம்..மகாராஷ்டிராவின் Warli கோலம்.


No comments:

Post a Comment