Tuesday 29 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..27.12.'20




🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..27.12.'20

ஆண்டாள் மகத்துவம் எத்தனை சொன்னாலும் திகட்டாது.

ஆண்டாள் தனது பதினைந்தாம் வயதில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை மணந்து இறைவனுடன் இரண்டறக் கலந்தாள். அதற்கு முன்பு அவள் பாடிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் வைணவ நூல்களுள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றின்  இலக்கிய புலமை, தத்துவம், பக்தி ஆகியவை மிகச் சிறப்பானது. 

திருப்பாவையின் முப்பது பாடல்களும் ஆண்டாள் தன்னை ஆயர்பாடி கோபியாக நினைத்து கண்ணனை கணவனாகப் பெற வேண்டி பாடப்பெற்றவை.

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி இறைவனை நினைந்துருகிப் பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக,  ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததாக உள்ளது.   இது வடமொழி மறைகளுக்கு நிகராக  ஓதப்படுகின்றது.

இதிலுள்ள ’வாரணமாயிரம்’ பாடல் மிகவும் புகழ் பெற்றது. 

ஆண்டாளின் கொண்டையும், அவள் கையிலுள்ள கிளியும் மிக பிரசித்தமானது.

ஆண்டாளின் இடக்கையில் இருக்கும் கிளி தினமும் புதியதாக  செய்யப்படுகிறது.

இந்த கிளியைச் செய்வதற்கு  நான்கறை மணி நேரம் ஆகுமாம். மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின் அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும், வாழையிஇலை மற்றும் நந்தியாவட்டை மர இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன. 

ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏

இன்றைய நிவேதனம்..குடைமிளகாய் பொங்கல்

இன்றைய கோலம்..சன்ஸ்கார் பாரதி


No comments:

Post a Comment