Tuesday 22 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..20.12.'20

 


🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..20.12.'20


ஆண்டாளின் கதை நாம் அறிந்ததே. சற்று விபரமாகப் பார்ப்போம். ஸ்ரீவில்லிபுத்தூரில்முகுந்தபட்டர் குமுதவல்லி இருவரும் அவ்வூர் பெ ருமாளான வடபத்ர சாமியின் பரம பக்தர்கள். ஆலயத்தில் பணி புரிந்து வந்த அத்தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் கருடனின் அம்சமான விஷ்ணு சித்தர். அவரும் பெருமாளிடம் அத்யந்த பக்தி கொண்டிருந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாலக்ஷ்மி அவருக்கு வளர்ப்பு மகளாக ஆண்டாள் என்ற பெயரில் அவதரித்தாள்.

மதுரையில் நடந்த போட்டியில் கிடைத்த பொற்கிழி பரிசை பெருமாள் கருட வாகனத்தில் வந்து பெறச் செய்தார். அச்சமயம் அங்கிருந்த அத்தனை பக்தர்களும் பகவானை தரிசித்தனர். மக்களின் கண் திருஷ்டி பகவானை பாதித்து அவருக்கு தீங்கு ஏற்படுமென்று  பயந்த பெரியாழ்வார்  திருப்பல்லாண்டு பாடலைப் பாடினார்.

அவரது பக்தியை மெச்சிய மகாவிஷ்ணு..நீரே பக்தியில் பெரியவர்..எனப் பாராட்டினார். அதுமுதல் விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் என அழைக்கப் பட்டார். இந்த பல்லாண்டு பாடலே இன்று உலகம் முழுவதிலுமுள்ள திருமால் ஆலயங்களில் பாடப்படுகிறது.

இன்றைய நிவேதனம்..கோதுமைரவா பட்டாணி பொங்கல்..பரங்கி சட்னி


இன்றைய கோலமும்..விளக்கமும்..

 A mandala, which is Sanskrit for “circle” or “discoid object,” is a geometric design that holds a great deal of symbolism in Hindu and Buddhist cultures.


Mandalas are believed to represent different aspects of the universe and are used as instruments of meditation and symbols of prayer most notably in China, Japan, India and Tibet.


No comments:

Post a Comment