Saturday 26 December 2020

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..24.12.'20



சூடிக் கொடுத்த சுடர்க்கொடி அரங்கனை அடைந்தாள். 

ஆண்டாள் சூடிய மலர் மாலைகள்  திருப்பதி பெருமாளுக்கு சார்த்துவதற்காக வருடந்தோறும் அனுப்பப்படுகிறது. இவ் வைபவம், புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவை அன்று நடைபெறுகிறது. 

ஆண்டாள் சூடிய மலர் மாலையை பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருகிறார். இந்த மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டது.

அதே போன்று, திருப்பதி பெருமாளின் மலர்மாலை, வருடந்தோறும் நடைபெறும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்காக அனுப்பப்படுகிறது.

இதே போன்று மதுரையில் நடைபெறும்  சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காக, திருவில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.

இன்றைய நிவேதனம்..சரவணபவன் காரப் பொங்கல்..ஓமவல்லி சட்னி

இன்றைய கோலம்..ஒரிஸ்ஸாவின் கலையான Chita or Jhoti எனப்படும் ஓவியவகை


No comments:

Post a Comment