Saturday 26 December 2020

கீதா ஜயந்தி...25.12.'20






கோதுமை ரவா கல்கண்டு பொங்கல்

பயத்தம்பருப்பு பாயசம்

இன்று கீதா ஜயந்தி.

பகவான் கிருஷ்ணர்உபதேசித்த ஸ்ரீமத் பகவத் கீதையின் முதல் சுலோகத்திலேயே தர்ம க்ஷேத்திரம் எனப்புகழப்படுகிறது உலகிலேயே மிகப் புண்ணியத் தலமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரம்.ரிக்வேதம் தோன்றிய காலத்திற்கும் பழமை வாய்ந்தது.

பாண்டவர்களின் முன்னோர்களில்ஒருவரான குரு மகாராஜா, இவ்விடத்தில் உண்மை, தயை, அன்பு, தூய்மை, தானம், தர்மம்,தவம், பிரம்மசரியம் இவை தழைக்க வேண்டி, தன் உடலை சிதைத்து விதைகளாகத் தர,

மகாவிஷ்ணு அவற்றை அப்பூமியில் விதைத்தார். அவரது தியாகத்தை மெச்சிய விஷ்ணு, இருவரங்கள் தர, குருவும் இவ்வூர் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டுமென்றும், இங்கு வாழ்ந்தவர்எத்தனை பாபம் செய்தாலும் சொர்க்கம் அடையவும் வரம் கேட்டார். சரஸ்வதி, யமுனை ஆறுகளை எல்லைகளாகக் கொண்டு கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியகுருக்ஷேத்திரம்,இடைப்பட்ட சில நூற்றாண்டுகளில் பெருமை குன்றினாலும், தன் புனிதம், புகழ் இவற்றைஇன்றளவும் இழக்கவில்லை.

இங்கு கால் வைத்த இடமெல்லாம் ஆலயங்கள்,கண் பார்த்த இடமெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொருவரலாற்றுக்கு சான்றாக நிற்கின்றன! நம்மை மகாபாரத காலத்துக்கே அழைத்துச்செல்கின்றன.

தீர்க்கதரிசியான ஸ்ரீ கிருஷ்ணபகவான், பகவத்கீதையை உபதேசிக்க குருக்ஷேத்திரம் சரியான இடம் என்பதை அறிந்தே, இவ்விடத்தை பாரதப்போர் நடத்தத் தேர்ந்தெடுத்தார்.  

சூரிய கிரகணத்தன்று இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில்நீராடுவதால் மறுபிறவி கிடையாது என்ற நம்பிக்கை.

இங்குள்ள ‘ஜ்யோதிசர் தீர்த்’ என்ற இடமே அர்ஜூனனுக்கு பகவான் கீதையை போதித்த இடமாகும். மனம் வெதும்பி, தைரியம்இழந்து, உளம் சோர்ந்து, விரக்தி அடைந்து அர்ஜூனன் போர் செய்ய மறுத்தபோது, கண்ணபரமாத்மா தர்மத்தை எடுத்துச் சொல்லி, ‘பிறப்பும், இறப்பும் என்றும் நிகழக்கூடியது; உன் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! தர்மத்தை நிலை நாட்ட போர் செய்ய வேண்டியது க்ஷத்திரியனாகிய உன் கடமை. பாசங்களிலிருந்து மனதை விலக்கி உன் கடமையைச்செய்!’ என்று அறிவுறுத்தி, தன் விசுவரூப தரிசனத்தைக் காட்டி, அர்ஜூனனை உற்சாகம்பெறச் செய்த இடம். அவ்விடத்தைக் காணும் போதே மெய் சிலிர்க்கிறது.

அங்குள்ள ஆலமரத்தினடியில்தான்கீதோபதேசம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அம்மரம் 5000 வருடத்திற்கும் மேற்பட்டதாம்.பலமுறை வெட்டப்பட்டும் துளிர்த்து விட்டதாம். அம்மரத்தின், விழுதுகளை அளவாகவெட்டி, மேல்பக்கம் கம்பி வலை போட்டு பராமரிக்கிறார்கள். அம்மரத்தின் கீழ்கிருஷ்ணரின் பாதங்கள் பளிங்கினால் செய்து வைக்கப்பட்டுள்ளன. 

பிரம்மாண்டமான, அகன்ற,பெரிய ஆல மரத்தைக் காணும்போது, ‘இதன் இலையும், வேரும், விழுதுகளும் ஆண்டவனின்உபதேசத்தைக் கேட்டிருக்குமோ?’ என்று வணங்கி, வழிபடத் தோன்றுகிறது. அருகில்கீதோபதேச சிலை ஒன்று காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளால், கண்ணாடிப் பெட்டிக்குபெட்டிக்குள் அமைக்கப்டுள்ளது.

‘ஜ்யோதிசர் தீர்த்’ 1000 அடி நீளமும், 500 அடி அகலமும்உள்ளது. சூரிய கிரகணத்தின்போது இங்கு வரும் மக்கள் இத்தீர்த்த நீரை, ஆலமரத்திற்குஊற்றி, இதில் நீராடி நீத்தார் கடன் செய்து, இங்கு அமர்ந்து பகவத் கீதையைப் படித்துவிட்டுச் செல்வார்களாம். உலகின் புனித நூல்களில் தலை சிறந்ததான கீதை தோன்றிய இடத்தில்அமர்ந்து தியானம் செய்து, மனக் கண்ணால் கீதாசாரியனைக் காணும்போது மனம் எங்கோபறப்பது போலுள்ளது! 

ஒவ்வொரு ஆண்டும் இங்கு நவம்பர் – டிசம்பரில் நடக்கும்‘கீதா ஜயந்தி’ உற்சவத்திற்கு உலக நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் கூடுகிறார்கள். நம்வாழ்வில் ஒருமுறை கண்டிப்பாகச் சென்று, தரிசித்து புண்ணியம் பெற வேண்டிய இடம் குருக்ஷேத்திரம்.

வைகுண்டம் செல்ல வழிகாட்டிய குருக்ஷேத்திர பூமியில் மார்கழி ஏகாதசியன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகை தந்து அந்தப் புண்ணிய பூமியை வணங்குகிறார்கள். அத்திருத்தலத் தின் மண்ணைப் பிரசாதமாகத் தங்கள் ஊருக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

அன்று விரதம் இருந்து அங்கு நடைபெறும் பூஜையிலும் பஜனையிலும் கலந்துகொள்கிறார்கள்.வைகுண்ட ஏகாதசியான இன்று பகவத்கீதையையும் படித்து பலன் பெறுவோம்

குருக்ஷேத்திரம் டில்லியிலிருந்து சண்டிகர் செல்லும்வழியில் 180 கி.மீ. தொலைவில் உள்ளது.

No comments:

Post a Comment