Sunday 28 June 2020

🙏குருவாயூர் ஏகாதசி🙏..(8.12.'19)


🙏குருவாயூர் ஏகாதசி🙏
மோக்ஷதாஏகாதசி எனப்படும் இந்த ஏகாதசி சிறப்பாக குருவாயூர் ஏகாதசி எனப்படும்.

காயத்ரியை விட சிறந்த மந்திரம் இல்லை. தாயினும் உயர்ந்த தெய்வம் வேறில்லை.காசியினும் பெரிய புண்ணியத் தலம் இல்லை.ஏகாதசியை விட சிறந்த பலன் தரும் விரதம் இல்லை.

இந்த நாளில் பலவிதமான பூக்களால் பெருமாளை அர்ச்சித்து, பழங்களை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம். துளசியால் பெருமாளை பூஜை செய்பவர்கள், வேண்டும் வரம் அனைத்தும் பெறுவார் என்கிறது புராணம். ஒவ்வொரு ஏகாதசியும் முழுதும் அன்னம் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.

மோக்ஷதா ஏகாதசி எனப்படும் இந்நாளில்தான் குருவாயூரப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இது குருவாயூர் ஏகாதசி என சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விழா 41 நாட்கள் மிக சிறப்பாகக் கொண்டா
டப்படும். ஏகாதசி அன்று முழுதும் நடை திறந்திருக்கும்.

கடைசி நாள் பகவானுக்கு ஆண்டுக்கு ஒருமுறையே நடக்கும் 'களபம்' என்கிற சந்தனாபிஷேகம் நடைபெறுகிறது. தினமும் லட்சதீபம் ஏற்றுவதும் யானைகளின் அணிவகுப்பும் நடைபெறும்.

இந்த ஏகாதசிக்கு இன்னும் சில பெருமைகளும் உண்டு. நாராயண பட்டதிரி நாராயணீயத்தை எழுதி முடித்து குருவாயூரப்பன் திருவடிகளில் சமர்ப்பித்தது இந்த நாளில்தான்.

54 ஆண்டுகள் ஐயனை சுமந்த கேசவன் என்ற யானை தன் 72 வயதில்  ஐயனின் சந்நிதி நோக்கி தன் தும்பிக்கையை நீட்டியவாறு  உயிர் துறந்ததும் இந்த ஏகாதசி நாளில்தான்.


அர்ஜுனனுக்கு, பகவான் கிருஷ்ணன் கீதையை உபதேசித்ததும் இந்த ஏகாதசி அன்றே. அதனால் இது கீதா ஜெயந்தி எனக் கூறப்படுகிறது.

இத்தனை மகிமைகள் கொண்ட இந்நாளில் 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற நாமத்தை ஜபித்து அவனருளை பெறுவோம்🙏

இன்றைய நிவேதனம்
கேஸர் நட் திரட்டுப்பால்..
பயத்தம்பருப்பு பாயசம்.




No comments:

Post a Comment