Wednesday 10 June 2020

மார்கழி சிறப்பு🙏🏻..(13.1.2020)

மார்கழி சிறப்பு🙏🏻
மார்கழியின் சிறப்புகளில் மற்றொன்று ஸ்ரீதியாகராஜ ஆராதனை. புஷ்ய பஞ்சமி எனப்படும் தை மாதத்தில் (தெலுங்கு கன்னடம் மராட்டியர்களுக்கு தை மாதம்..நமக்கு மார்கழி) வரும் தியாகராஜ ஆராதனை அவர் பிறந்த திருவையாறில் ஒவ்வொரு வருடமும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்கீத மும்மூர்த்திகளே இன்று நம்முடைய இசைக்கு ஆதாரமான சங்கீதத்தின் தந்தைகள் எனலாம். அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்..

தியாகராஜ சுவாமிகள், சாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் பதினான்கு ஆண்டு கால இடைவெளியில் திருவாரூரில் அவதரித்தார்கள்.

1762ல் திருவாரூரில் பிறந்த சாமா சாஸ்திரிகளின் ஆத்மார்த்த தெய்வம் தஞ்சாவூர் காமாட்சி அம்மன்.  இவரது பல கீர்த்தனைகள்  நாகை  நீலாயதாட்சி, திருவையாறு தர்மசம்வர்த்தனி, மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மீது பல இனிமையான கீர்த்தனைகளை இயற்றியவர்.

1767ல் திருவாரூரில் பிறந்த  தியாகய்யர்  ஸ்ரீராமர் மேல்  அளப்பறிய பக்தி கொண்டு தெலுங்கு மொழியில்  பல கீர்த்தனைகளை சுவைபட இயற்றியவர். ஸ்ரீராமரின் தரிசனம் பெற்றவர்.

1776ல் திருவாரூரில் பிறந்த  முத்துசுவாமி தீட்சிதர் திருவாரூர் தியாகேசர்,  கமலாம்பாள், மற்றும் கணபதி ஆகியோர் மீது அதிக கீர்த்தனைகளை இயற்றியவர். இவர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் சங்கீத உலகுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும்.

திருப்பாவை..28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

திருப்பள்ளியெழுச்சி..8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

#இன்றையகோலம்
சங்கீத வாத்யங்கள்
#நிவேதனம்
பால் பொங்கல்





No comments:

Post a Comment