Thursday 18 June 2020

மார்கழியின் சிறப்பு🙏..(19.12.'19)

மார்கழியின் சிறப்பு🙏
மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களின் ஒருநாள்.அதன்படி தை முதல் ஆறுமாதம் அவர்களுக்கு காலை நேரம். மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் செய்யும்வழிபாடு மிகச் சிறந்தது.

இந்நாளில் செய்யப்படும் பாவை நோன்பு தமிழ்நாட்டில் நோற்கப்படும் நோன்புகளில் முதன்மையானது.இந்த நோன்பு பெண்களாலேயே நோற்கப்
பட்டுள்ளது.

நல்ல மழை பெய்து நாடு சிறக்கவும், நல்ல கணவரை அடையவும், மணமானவர்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டுவதும் இந்நோன்பின் முக்யத்துவமாகும்.மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது.

#திருப்பாவை
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து  ஏலோர் எம்பாவாய்|

#திருவெம்பாவை
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்|
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்|
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே|
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்|

#இன்றையகோலம்..
கார்மேக வண்ணன் கண்ணன்🙏
#இன்றையநிவேதனம்..
ரவா பொங்கல்..சிதம்பரம் கொத்ஸு







No comments:

Post a Comment