Sunday 28 June 2020

மார்கழியின் சிறப்பு🙏..(18.12.2019)

மார்கழியின் சிறப்பு🙏

'மாதங்களில் நான் மார்கழி மாதம்' (மாஸானாம் மார்கஸு ஹோஸ்மி)என்று ஸ்ரீகிருஷ்ணபகவான் கீதையில் கூறுகிறார். ஆதி காலத்திலிருந்தே இம்மாதம் கடவுளை வழிபடுவதற்கு சிறந்த மாதமாக உள்ளது. இறைவனை வழிபட மட்டுமே இம்மாதம் ஒதுக்கப் பட்டிருப்பதாலே மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.

#திருப்பாவை
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ!  பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து  ஏலோர் எம்பாவாய்.

#திருவெம்பாவை
பாசம் பரஞ்சோதிக் கென்பாய்| இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே|
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்|
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ| விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்|

#இன்றையகோலம்..
முத்தமிழ்த்தலைவன் முருகன்🙏
#இன்றையநிவேதனம்
கல்யாணப் பொங்கல்..தக்காளி தொக்கு






No comments:

Post a Comment