Saturday 13 June 2020

வைகுண்ட ஏகாதசி🙏🙏..(6.1.2020)


மார்கழி சிறப்பு🙏
வைகுண்ட ஏகாதசி🙏🙏
தாயை விட உயர்ந்த தெய்வமில்லை; காசியை மிஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை; காயத்ரி மந்திரத்தை விட உயர்ந்த மந்திரம் இல்லை; அது போல் ஏகாதசி விரதத்தை விட சிறந்த விரதமும் இல்லை. அந்த அளவுக்கு மற்ற விரதங்களைக் காட்டிலும் ஏகாதசி விரதம் உயர்ந்ததாகும். அதிலும் மார்கழி மாதத்தில் சுக்லபக்ஷ திதியில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் தான் மிக உயர்ந்த விரதம்.

வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து தன்னை வழிபடும் அனைவருக்கும் தான் வைகுண்ட பதவி அளித்து ஆட்கோள்வதாக பகவான் மஹாவிஷ்ணு அருளியிருக்கிறார். அதனால் தான் பகவத் கீதையிலும் கிருஷ்ணபரமாத்மா..மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன்.. என்று கூறியிருக்கிறார். இதனாலேயே மார்கழி மாத ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்திவந்தான்.தேவர்களையும் முனிவர்களையும் காப்பதாகக் கூறிய மகாவிஷ்ணு அசுரன் முரனோடு போர் புரியத் தொடங்கினார். இருவருக்கும்
இடையே நடைபெற்ற கடுமையான போர் 1000 ஆண்டுகள் நீடித்தது. இதனால், மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்குசாதகமாகப் பயணன்படுத்திக் கொள்ள நினைத்த அசுரன் முரன் மகாவிஷ்ணுவை கொல்லத் துணிந்தான். அப்போது  அவரிடமிருந்த சக்தியானது ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த பெண்ணை அசுரன் முரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

நித்திரையில் இருந்து விழித்
தெழுந்து நடந்ததைக் கண்ட மகாவிஷ்ணு, அந்த சக்திக்கு 'ஏகாதசி' எனப் பெயரிட்டு,  'உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன்' என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.

ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து மகாவிஷ்ணுவின் அருளும் வரமும் பெற்றதால்  அந்நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்று நலமாக வாழ்வோம் என்பது ஐதீகம்.

வைகுண்ட வாசல் பிறந்த கதை..
படைப்பு கடவுளான பிரம்மாவின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கி ஊழிக்காலம் தொடங்கியதும் மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மா அடங்கினார். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கியதும், தாமரை இலை தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க, அதில் சில துளிகள் அவர் காதுகளில் சென்றன.

விழித்த பிரம்மா முதல் வேலையாக பிராண வாயுவைத் தூண்டியபோது அவரின் இரு காதுகளிலிருந்து அசுத்தத்துடன் அந்த தண்ணீர் வெளியே வர ஒன்று மிருதுவானதாகவும், மற்றொன்று கடினமானதாகவும் மது, கைடபர் அரக்கர்களாக உருவெடுத்தன. அவர்கள் பிரம்மனிடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களைத்  திருடிச் சென்றபோது ஹயக்ரீவராக அவதரித்த பெருமாள் வேதங்களைத் திரும்ப கொண்டு வந்தார்.

பின்னர் உலகில் உள்ள உயிர்களை துன்புறுத்த துவங்கினர். தேவர்கள், முனிவர்கள் என அனைத்து உயிரினங்களும் விஷ்ணுவிடம் முறையிட, அவர்களை அடக்க
மது, கைடபருடன் போரிட்ட பெருமாளிடம் அவர்கள்  சரணடைந்தனர். 'எங்களுக்கு
நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும், நாங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும் வழியை காட்டுங்கள்' என கேட்டுக் கொண்டனர்.

அவ்வாறே அவர்களுக்கு அருளிய பெருமாளிடம் 'எங்களைப் போல அனைவரும் இந்த புண்ணியம் பெற வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டனர். அத்துடன்
'வைகுண்ட ஏகாதசி திருநாளில் வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில்
தாங்கள் வெளியே வரும் போது, தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவத்தை எண்ணி வருந்தி அதை திருத்திக் கொள்பவர்
களுக்கு முக்தி அளிக்க வேண்டும்' என அவர்கள் கேட்டுக் கொண்டதன் காரணமாகத் தான் வைகுண்ட வாசல் உருவானது.  மது கைடபர் ஆகியோரை அடக்கியதால் மதுசூதன் என்ற பெயர் பெருமாளுக்கு வந்தது.

மகாபாரதத்தில் குருக்ஷேத்ரப் போரின் துவக்கத்தில் கிருஷ்ணன்அர்ச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை
விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதன்மையாகக் கருதப்படு
கின்ற ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத ஸ்வாமி  கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருநாளும் பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவது கண்கொள்ளாக் காட்சி.

வைகுண்ட ஏகாதசியன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் எனப்படும் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.

ஆந்திர மாநிலத்தின்
திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்
படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் வைகுண்ட துவாரம் என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது.

குறிப்பிட்ட நாளில் நம் நன்மைக்காக இஷ்ட தெய்வத்
தைக் குறித்து உணவு
உண்ணாமல் நோன்பாக
இருப்பதை விரதம் என்பர். இதில், ஏகாதசி விரதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாகிய திருமாலே, இந்த விரதத்தினை மேற்கொள்கிறார் என்பார்கள். எனவே, இதன் மகிமையை அளவிட கருவியே இல்லை.

அனைத்தையும் கடந்தவர் கடவுள். நமக்குத் தான் விரதம், ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம். கடவுளுக்கு ஏது என நமக்குத் தோன்றலாம். சத்தியத்தைக் காக்க மகாவிஷ்ணுவே திரேதாயுகத்தில் ராமனாகப் பிறந்து சாதாரண மனிதனைப் போல பலவிதமான துன்பங்களை அனுபவித்து, தர்மத்தை மீறாமல் வாழ்ந்து காட்டினார். அப்பரம்பொருளே துவாபரயுகத்தில் கிருஷ்ணராக அவதரித்து தர்மத்தை நிலைநிறுத்தி உதாரண புருஷராகத் திகழ்ந்தார். அதேபோல, பரம்பொருளான விஷ்ணுவே, ஏகாதசியின் சிறப்பினை உணர்த்தும் வகையில், அவரே விரதம் இருந்து அருள் செய்கிறார்.

இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த விரதமாகும். ஏகாதசி விரதம் இருப்போர், தசமி அன்று பகல் வேளையில் மட்டும் உண்டுவிட்டு, இரவில் பழங்களை மட்டும் உண்ண வேண்டும். ஏகாதசியன்று முழுமையாக உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும்.

மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை கறி சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் அவசியம் இடம்பெற வேண்டும். துவாதசியில் அதிகாலையில் சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக் கூடாது. பூஜைக் கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.

ஏகாதசி நாளில் தாய், தந்தையருக்கு
சிரார்த்தம் முதலிய பிதுர்கடன் இருந்தால், அதை நிறுத்திவைத்து ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்றே செய்ய வேண்டும் என்று விரதசாஸ்திரம் கூறுகிறது. தீட்டிலும் ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது சாஸ்திரவிதி.

ஏகாதசி விரத மகிமை...
பரமேஸ்வரனிடம் ஒருமுறை பார்வதிதேவி, மிகச்சிறந்த விரதம் எது எனக்கேட்டபோது ஈசன்... விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதமே. பாவங்களைப் போக்கும் விரதம் இது.இதை அனுஷ்டிப்
பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். முப்பத்துமுக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து பாற்கடல் வாசனின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு
வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்ற சிறப்புப் பெயருண்டு. யார் ஒருவர் ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருக்கிறாரோ,
அவர் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெற்று மேலான கதியை அடைகிறார்... என்றார். 

ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சௌபாக்கியங்
களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.






No comments:

Post a Comment