Monday 1 June 2020

மார்கழி சிறப்பு🙏..(14.1.2020)

மார்கழி சிறப்பு🙏
உழவுத் தொழிலைக் கொண்ட விவசாயிக்கு மழையைப் போன்றே சூரியனின் தயவும் வேண்டும். காளை, பசுவின் உதவியும் வேண்டும். ஆகவேதான் முதல்நாள் போகியும் , மறுநாள் பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப் படுகிறது.

போகி என்பது இந்திரனின் பெயர். முற்காலத்தில் சோழநாட்டில் இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆயர்கள் ஆண்டு தோறும் மழை பொழிந்து நாடு சுபிட்சம் அடைய இந்திரனுக்கு பூஜை செய்து வந்தனர். இந்திரன் கிழக்கு திசைக்கு திக்பாலர்.

மழை வாழ்விற்கு மிக அத்யாவசியமானது.  அதனாலேயே வள்ளுவரும் கடவுள் சிறப்புக்கு அடுத்து 'வான் சிறப்பு'க்கு முக்யத்துவம் கொடுத்துள்ளார்.

மழை காலம் மார்கழியோடு முடிவதால் இது காரி-கழி விழா. மழைக்கு நன்றி செலுத்தி பிரிவுபசாரம் செய்ய ஏற்பட்ட விழா. பழையன கழிதலும் புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் கொள்கையாக உள்ளது.

அக்கால இந்திரவிழா இன்று போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.பழமையின் இறந்த பகுதியைச் சுட்டெரித்து உயிர்நிலைப் பகுதியை புதுப்பித்துக் கொண்டு ஒரு புதுமைப் பெருவாழ்வு வாழ இந்தப் பண்டிகை ஒரு அறிகுறியாகும்.

இன்றுடன் தக்ஷிணாயனம் முடிந்து நாளை முதல் உத்தராயணம் ஆரம்பம்.

திருப்பாவை..29,30
29.சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

30.வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.

திருப்பள்ளியெழுச்சி..9,10
9.விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

10.புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
#ராதாபாலுமார்கழி சிறப்பு🙏
உழவுத் தொழிலைக் கொண்ட விவசாயிக்கு மழையைப் போன்றே சூரியனின் தயவும் வேண்டும். காளை, பசுவின் உதவியும் வேண்டும். ஆகவேதான் முதல்நாள் போகியும் , மறுநாள் பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப் படுகிறது.

போகி என்பது இந்திரனின் பெயர். முற்காலத்தில் சோழநாட்டில் இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆயர்கள் ஆண்டு தோறும் மழை பொழிந்து நாடு சுபிட்சம் அடைய இந்திரனுக்கு பூஜை செய்து வந்தனர். இந்திரன் கிழக்கு திசைக்கு திக்பாலர்.

மழை வாழ்விற்கு மிக அத்யாவசியமானது.  அதனாலேயே வள்ளுவரும் கடவுள் சிறப்புக்கு அடுத்து 'வான் சிறப்பு'க்கு முக்யத்துவம் கொடுத்துள்ளார்.

மழை காலம் மார்கழியோடு முடிவதால் இது காரி-கழி விழா. மழைக்கு நன்றி செலுத்தி பிரிவுபசாரம் செய்ய ஏற்பட்ட விழா. பழையன கழிதலும் புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் கொள்கையாக உள்ளது.

அக்கால இந்திரவிழா இன்று போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.பழமையின் இறந்த பகுதியைச் சுட்டெரித்து உயிர்நிலைப் பகுதியை புதுப்பித்துக் கொண்டு ஒரு புதுமைப் பெருவாழ்வு வாழ இந்தப் பண்டிகை ஒரு அறிகுறியாகும்.

இன்றுடன் தக்ஷிணாயனம் முடிந்து நாளை முதல் உத்தராயணம் ஆரம்பம்.

திருப்பாவை..29,30
29.சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

30.வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.

திருப்பள்ளியெழுச்சி..9,10
9.விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

10.புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!


No comments:

Post a Comment