Tuesday 12 January 2021

Saturday_special..9.1.2021

 என் மருமகள் ஆர்த்தி மிக நன்றாகப் பாடுவாள். நடனம் ஆடுவாள்.ஆனால் இளம் வயதில் அவளை யாரும் உற்சாகப் படுத்தி ஆடவோ பாடவோ சொல்லவில்லை என்று குறைப்பட்டுக் கொள்வாள். 

அவள் திருமணத்தில் நலங்கின்போது அப்பொழுது பிரபலமான  சந்திரமுகி திரைப்படத்தில் வரும் பாட்டான 'ராரா' பாட, அவள் பாட்டில் என் மகனோடு சேர்ந்து மயங்கி விட்டோம் நாங்களும்! எந்தப் பாட்டும் கேட்டதும் அப்படியே பாடுவாள். நடனமும் அப்படியே! இத்தனைக்கும் அவள் முறையாக நடனமோ இசையோ கற்றுக் கொள்ளவில்லை.  

எங்கள் சஷ்டிஅப்த பூர்த்தியின்போது என் பெண்ணும் அவளுமாக ஆடிய நடனத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். சென்னையில் நாங்கள் குடியிருந்த பில்டிங்கில் சுதந்திர தினத்தன்று அவள் ஆடிய 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' நடனத்துக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது!

இப்பொழுது அவர்கள் எங்களுடன் இருப்பதால் அனந்து அவர்களின் 'மத்யமர்  மார்கழி வைபவத்தில் @ திருப்பாவைக்கு நடனம் ஆடச் சொன்னேன். இரண்டு நாளில் practice செய்து அருமையாக ஆடினாள். 

எவருமே பாராட்டி ஊக்கமளிக்கும்போதுதான் அவர்களுக்குள்ளிருக்கும் திறமை வெளிப்படும். நம் மத்யமர் திறமைகளை ஊக்கப்படுத்துவதால்தான் இன்று பலரும் தம் உள்ளே மறைந்திருந்த எழுத்து, இசை, நடனம், ஓவியம் போன்ற திறமைகளை வெளிக்காட்ட முடிகிறது. இன்று ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனித்திறமை மறைந்திருப்பதை மத்யமரில் எழுதுபவர்களிடமிருந்து கண்கூடாகக் காணமுடிகிறது. அதனால் அடையும் மகிழ்ச்சியும் தனிதானே! இதற்கு மத்யமர் தளம் உதவியாக இருப்பதை நினைத்து மிகப் பெருமையாக உள்ளது. 

இதில் நான் மட்டுமன்றி என் குடும்ப உறுப்பினர்களின் திறமையையும் வெளிப்படுத்த முடிவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மருமகள் ஆர்த்தியின் திருப்பாவை நடனங்கள் உங்கள் பார்வைக்கு! மத்யமருக்கு நன்றிகள் பல🙏


No comments:

Post a Comment