மார்கழிக் கோலம்...
அதிகாலையில் எழுந்து கோலம் இட்டு, சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்பது வழக்கம்.
தேவர்களுக்கு இரவுக் காலம் முடிந்து பொழுது புலர்வது மார்கழியில்தான். அவர்களை வரவேற்கவே அழகிய கோலம்.
இந்நாளில் கோலப் போட்டிகள் நிறைய நடைபெறுவதால் விதவிதமான கோலங்கள் போடும் முறைகள் உள்ளது.
விடிகாலையில் வாசலில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது தேவர்களை வரவேற்க என்பதுடன்,மார்கழி மாதத்தில் சூரியன் சற்று நேரம் கழித்து வருவதால், அதிகாலை இருள் வெகுநேரம் இருக்கும். வழிப்போக்கர்களுக்கு வெளிச்சம் தருவதற்காக இப்பழக்கம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது..
அந்நாளில் தங்கள் வீட்டில் பெண் அல்லது பிள்ளைகள் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதை மற்றவர் அறிந்து கொள்ள அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மீது பூசணிப் பூ வைப்பார்கள். எல்லா வீடுகளிலும் வைக்கும் வழக்கம் கிடையாது.
இனது விடிகாலை வீதி பஜனைக்கு வருபவர்கள் கண்ணில் பட்டு இதன் விவரத்தை அவர்கள் புரிந்து கொண்டு தை மாதம் திருமணம் பேசி முடிப்பார்களாம்! அக்கால வழக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை அர்த்தங்கள்!
கோலம் பற்றிய விபரங்கள் தொடரும்...
இன்றைய கோலம்..ராஜஸ்தானின் மண்டனா ரங்கோலி. அந்நாளில் மண் வீடுகளின் சுவற்றிலும், தரையிலும் போடப்படும். கடவுளை வரவேற்கவும், துர்சக்திகளிடமிருந்து வீட்டைக் காக்கவும் இவை வரையப்படுவதாக சொல்லப்படுகிறது.
இன்றைய நிவேதனம்..ஐந்தரிசி ட்ரைஃப்ரூட்ஸ் பொங்கல்
No comments:
Post a Comment