Tuesday 12 January 2021

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..9.1.'21





மார்கழி வளர்பிறை ஏகாதசி இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.அதற்கு சபலா ஏகாதசி என்று பெயர். இவ்வருடம் ஜனவரியில் வரும் இந்த சபலா ஏகாதசி டிசம்பர் 31 அன்று மீண்டும் வருவது சிறப்பாகக் கூறப்படுகிறது.

இதற்கான கதை வித்யாசமானது. மாகிஷ்மன் என்ற மன்னனின் மூத்த மகன் லும்பக். அவன் நற்குணங்களின்றி தீய வழியில் வாழ்ந்ததால், அரசன் அவனை நாடு கடத்தி விட்டான். செல்வந்தனாக சொகுசாக வாழ்ந்தவன் காடுகளில் வாழ முடியாமல் உணவின்றி தவித்தான். ஒருநாள் இரவு உணவின்றி பசியால் தூங்க முடியாமல் தவித்தான். மறுநாள் தன் விதியை நொந்தபடி இறைவனை வேண்டி கிடைத்த பழங்களைக் கொண்டு வந்து சாப்பிட்டும் பசி அடங்காததால் அன்றும் தூக்கமின்றி கழித்தான்.

அவனுக்கே தெரியாமல் சபலா ஏகாதசி அன்று விரதம் இருந்ததால் அவன் நற்புத்தி அடைந்தான். மனம் திருந்தி நாட்டுக்குச் சென்றவனை அரசன் மகிழ்ந்து வரவேற்று அவனை மன்னனாக்கினான்.அவனும் பக்தியுடன் நல்ல முறையில் அரசாண்டு விஷ்ணுலோகம் அடைந்தான். 

அறியாமல் விரதம் இருந்தாலும் நற்பலன்களையும் மோட்சத்தையும் தரும் இந்த ஏகாதசி விரதம். 

ஏகாதசி நாட்களில்  உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசி இலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்திய பின்பே உணவு உண்ண வேண்டும்..

துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெற வேண்டும். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து நாம் சாப்பிட வேண்டும். அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். 

இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும். சகல செல்வங்களும் உண்டாகும். சபலா என்பதற்கு வெற்றி என்பது பொருள். இந்த விரதம் இருப்பவர்கள் வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று சிறப்பாக வாழ்ந்து நாராயணன் திருவடி அடைவர்.

சென்ற ஆண்டு நான் போட்ட பெருமாள் கோலங்களில் சில உங்கள் பார்வைக்கு..

இன்றைய நிவேதனம்..பயத்தம்பருப்பு பாயசம்..கோதுமைரவா மில்க்மெய்ட் பொங்கல்


No comments:

Post a Comment