Tuesday 12 January 2021

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..6.1.'21




மார்கழி மாதத்திற்கு ஏராளமான புராண சிறப்புகள் உண்டு. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனை வழிபடும் மாதமாகப் போற்றப்படுகிறது.


மார்கழி மாதம் தேவர் மாதம் எனப்படும். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.


நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகும். சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.


பெருமைகள் அதாவது 'பீடு' நிறைந்த மாதம் என்பதே மருவி 'பீடை' என்று ஆனது. 'பீடு' என்றால் 'பெருமை'எனப் பொருள்.


மார்கழியின் 30 நாட்களும் விரதம் இருந்து, பெருமாளைத் தனது கணவனாக ஆண்டாள் ஏற்றுக் கொண்டாள்.


மார்கழி மாதத்திற்கு ஏராளமான புராண சிறப்புகள் உண்டு. அதாவது, மகாபாரத யுத்தம் இம்மாதத்தில் தான் நடந்ததாம்.


திருப்பாற்கடல் கடையப்பட்ட

போது, முதலில் விஷம் வந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியது இந்த மார்கழி மாதத்தில்தான்.


இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, 

கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.


இறை வழிபாட்டிற்கு  சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் நாமும் வைகறைத் துயிலெழுந்து இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றி அனைத்து செல்வங்களையும் பெறுவோம்.


இன்றைய கோலம்..Rangoli with a message..Welcoming vaccine for Corona


இன்றைய நிவேதனம்..அன்னாசிப் பொங்கல்


No comments:

Post a Comment