மார்கழியில் கோலம் போடுவதன் முக்கியத்துவம் பற்றி பார்த்தோம். இனி எப்படி கோலம் போட வேண்டும் என்று பார்ப்போம்.
பசுவின் சாணி ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் சாணத்தை நீரில் கரைத்து வாசல் தெளிக்கவேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய்த் தொற்றுகள் ஏற்படும்.
இதைத் தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்துத் தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்.
அதன்மீது அரிசி மாவில் கோலமிட வேண்டும். செருப்பு போட்டுக் கொண்டு கோலமிடக் கூடாது.
மேலிருந்து கீழ் நோக்கி புள்ளிகள் வைத்து, கீழிருந்து மேல் நோக்கி கோலம் வரைய வேண்டும். அழித்து, அழித்து கோலம் போடக் கூடாது.
பொதுவாக, கோலம் போடுவதில் பல பலன்கள் உள்ளது. குனிந்து கோலமிடுவது, நல்ல யோகா செய்வது போன்ற பயன்தரும்.
மார்கழியில் விடிகாலை ஓஸோன் ஈதிகமாக இருப்பதால் கோலமிடும்போது நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
புள்ளிகள் வைத்துக் கோலம் போடுவதால், புத்தி சிதறாமல் ஒரு நிலையில் இருக்க பயிற்சியாகும். தலைக்கு ரத்த ஓட்டம் பாய்வதால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
நாம் நடக்கும் போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற பல உயிர்கள் இறந்து போவதால் ஏற்படும் தோஷத்
தினால் கன்னிப்பெண்களுக்கு
திருமணத்தில் தடை வரும்.
மார்கழிக் குளிரில் பறவை
களும், எறும்புகளும் உணவு கிடைக்காமல் திண்டாடும். நாம் வாசலில் அரிசிமாவில் கோலம் போடுவதால், எறும்புகளுக்கு உணவாகும். இதனால் திருமண தோஷம் நீங்கி விரைவில் மணமாலை கிட்டும்! மேலும் அன்னதானம்
செய்த பயன் கிடைக்கும்.
இன்றைய கோலம்..Doodle art Rangoli
நிவேதனம்..அவல் க்ரீன் பொங்கல்
No comments:
Post a Comment