விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதற்காக பாடப்படும் பாடல்களே திருப்பள்ளி எழுச்சி எனப்படும்.திருப்பள்ளி
யெழுச்சி என்பது,‘சுப்ரபாதம்’
என வடமொழியில் அழைக்கப்படுகிறது.
இது அதிகாலைப் பொழுதில் இருள்நீங்க ஒளி எழுவதுபோல,
ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் நம் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் அருளை உணரச் செயயப் பாடப்படும் பாடல்கள் ஆகும். இது இறைவனைத்
தூக்கத்திலிருந்து எழுப்புவது போல் நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதாக சொல்லப்படுகிறது.
திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய ஸ்ரீரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே திருப்பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் மார்கழி மாதம் தொண்டரடிப்
பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.இதைப் போன்றே மாணிக்க வாசகர் ஈசனை எழுப்புமுகமாக, திருப்பெருந்துறையில் இருந்தபோது, விடிகாலையில் திருப்பள்ளியெழுச்சி என்னும் பத்து பாடல்களை பாடினார்.
மார்கழி மாதம் முழுதும் சிவாலயங்களில் முதல் 20 நாட்கள் அவர் இயற்றிய திருவெம்பாவையும், அடுத்த 10 நாட்கள் திருப்பள்ளியெழுச்சியும் இசைக்கப் படுகின்றன.
இன்றைய நிவேதனம்..சம்பா ரவை மாங்காய்ப் பொங்கல்
No comments:
Post a Comment