Sunday 3 January 2021

🕉️ மகத்தான மார்கழி🌸💮🏵️🔯☸️⚛️ ⚕️🔆..31.12.'20



மாணிக்கவாசகப் பெருமான் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடிய திருவெம்பாவையில் சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறார். பாசுரங்கள் 'எம்பாவாய்' என்று அதன் இருபது பாடல்களிலும் முடிவதால் அதுவே திருவெம்பாவை என்ற பெயராய் அமைந்தது.

நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பது திருவெம்பாவையின் தத்துவமாகும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்

போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம் என்று பலவாறு ஈசனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம்  வேண்டுவதாக அமைந்துள்ளது.

திருவெம்பாவையின் முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.

இன்றைய கோலம்..ஐஸ்வர்யக் கோலம்

நிவேதனம்..காரட் பொங்கல்


No comments:

Post a Comment