Tuesday 23 March 2021

மகளிர்_தினம்(8.3.'21)


 உலக மகளிர் தினம் ( International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.


உலக மகளிர் தினம் ( International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18 ம் நூற்றாண்டில் அமெரிக்காவில்  பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.  பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட மறுக்கப்பட்டது.

1857 ம் ஆண்டு முதல் பெண்கள் தொழிற்சாலைகள் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தும் ஊதியம் மிகக் குறைவாகவே தந்ததால்
பெண்கள் மிகுந்த வருத்தமடைந்து, ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர்.  அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்காததால் பெண் தொழிலாளர்கள் 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில்  ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட விரும்பியும் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920 ல் ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடபட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
பலநாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

நம் வாழ்வில் பெண்களைக் கொண்டாடி, உலகிற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் நாள் இது. அதே நேரத்தில், சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கம் பாலின சமத்துவம்.

சமமான பகிர்வு என்பதை தாண்டி இந்த உலகில் எல்லாவற்றையும் சமத்துவமாக மாற்றுவதற்கு அனைவருக்கும் தேவையான பகிர்வை கொடுக்க வேண்டும் என்பதே இதன் பின்னணி. அந்த வகையில் இந்த உலகை நீடித்து கொண்டு செல்வதற்கு ஆண்களையும் விட அதிமாக உழைக்கும் பெண்களுக்கு மரியாதையான அன்பான வார்த்தைகளால் வாழ்த்துக்களை கூறுவோம்!

இந்த ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கருப்பொருள் "DigitALL: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகும். இந்த கருப்பொருள், தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் கல்விக்கு பெண்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்கள் தமக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.. பெண் உரிமைகளை வலியுறுத்தும் நாள் இது …ஆணுக்குப் பெண்ணிங்கே சரிநிகர் சமானம் என்ற பாரதி வாக்கை  உண்மையாக்க மாற்றம் நம்மிடமிருந்து உருவாகட்டும்!

அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment