Thursday 4 March 2021

புத்தாண்டே வருக🌻(31.12.'20)

 

🌺புத்தாண்டே வருக🌻

2020..ஆரம்பித்தபோதே ஆனந்தம்தான். எப்பொழுதும் நவராத்திரியிலிருந்தே நான்  பிஸியாகி விடுவேன்.மார்கழி முழுவதும் விடிகாலை பூஜை, விதவிதமாய் கோலம்.. நேரம் சரியாக இருக்கும்.

ஜனவரி 3 மும்பையில் என் பெண்ணின் மாமனாருக்கு 75வயது நிறைவு விழாவுக்கு சென்றபோது அங்குள்ள மத்யமர் தோழிகளான மோகனா, விஜியை சந்தித்தது இவ்வருடத்தின் முதல் சந்தோஷம்!

பொங்கல் முடிந்ததும் relaxation ற்காக ஹைதராபாதிலுள்ள பெண் வீட்டிற்குச்  சென்று ஒரு மாதம் இருந்துவிட்டு  வருவோம். அதனாலேயே இரண்டு வருடங்களாக மத்யமர் ஆண்டு விழாவிற்கு
வரமுடியவில்லை. இந்த ஆண்டும் அதேபோல் சென்று பல ஆலயங்கள்,  விசாகப்
பட்டினம், ஹோட்டல் சாப்பாடு என்று ஜாலியாக enjoy பண்ணிவிட்டு  வந்தோம்!

ஏப்ரல் மாதம் பிள்ளைகள் வீட்டுக்கு லண்டனும் பெர்லினும் சென்றுவர விஸா apply செய்திருந்தோம். அங்கு போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் லிஸ்ட் போட்டு, அதில் பத்மாவை சந்திக்க Denmark போகும் programmeம் உண்டு...

நாங்கள் குடந்தையில் புண்யக்ஷேத்ரம் என்ற இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருந்ததால் திருச்சியிலிருந்து இங்கு மார்ச் 18 வந்தோம்...
மார்ச்22முதல் ஊரடங்கு ஆரம்பிக்க...
கொரோனாவால் உலகமே ஸ்தம்பிக்க...
விஸா cancel ஆகி என் ஆசை புஸ்வாணமாயிற்று!

கட்டிட வேலைகளும் நின்றுவிட...
வெளியில் எங்கும் செல்ல முடியாமல்...
இங்கு மாசில்லாத காற்றும், காலடியில் காவேரியும்..
பசுமையான சுற்றுச் சூழலும் எங்களுக்கு புத்துணர்வுதர..
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை இன்பமயம்தானே!

ஜூன் மாதத்தில் என் கணவரின் சித்தப்பா பிள்ளை கொரோனாவிற்கு பலியாக..சற்றே நிலைகுலைந்து போனோம் நாங்கள். வெளியில் வரவே பயந்த நாட்கள் அவை..
மனிதரைப் பார்த்து மனிதரே பயந்த கொடுமையான நாட்கள்...

ஜூலைக்குப் பின்பே வீட்டு வேலைகள் நடந்து, எங்கள் ஆசைப்படி வீடு கட்டி ஆகஸ்ட்டில் கிரகப்ரவேசம் செய்தோம். சென்னையி
லிருந்து வந்த என் பிள்ளை குடும்பம் இந்த சூழ்நிலையில் மயங்கிப் போனார்கள்!

பங்களா போல வீடு..பக்கத்தில் தோட்டம்..விளையாட நாய்க்குட்டி..மாஸ்க் போட வேண்டாம்..கால்வீசி நடக்கலாம்..காவேரியில் குளிக்கலாம் என்று பேத்திகளுக்கு பரம சந்தோஷம்!

பேத்திகளுக்கு online classes.. என் பிள்ளைக்கும் work from home என்பதால் கடந்த ஆறு மாதங்களாக இங்குதான் இருக்கிறார்கள். என் பெண்ணும் குழந்தைகளுடன் வர ஒரே கொண்டாட்டம்தான்.
பேத்திகளோ இனி ஜூன்மாதம்
பள்ளி திறக்கும்போது
போனால் போறும் என்று ஒரே குஷியில் இருக்கிறார்கள்!

வீட்டு வேலைகள் அதிகம் என்பதால் மத்யமரில் அதிகம் என்னால் எழுத முடியவில்லை. இந்தமுறை 'மத்யமர் மார்கழி வைபவத்'தில் கலந்து கொண்டு  திவ்யதேசங்கள் பற்றி பேசியதும், என் மருமகள் திருப்பாவைக்கு நடனம் ஆடியதும் மறக்க முடியாத சந்தோஷ நேரங்கள்!

கொரோனாவால் பல கஷ்டங்கள் வருத்தங்கள் இருந்தாலும் குடும்ப மக்கள் ஒன்றாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் முடியும் என்பது மறுக்க முடியாத நிஜம்.

சென்ற ஆண்டு நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களைத் தந்தாலும் அவை நம்மை நம் மனதை சுற்றுப் புறத்தை எப்படி தலைகீழாக மாற்றியது என்பதை நம்மால் மறக்க முடியாது. 

இனிவரும் 2021ம் ஆண்டு நமக்கு ஏற்றங்களைத் தரும் சிறந்த ஆண்டாக இருக்க இறையருளை வேண்டுவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐

No comments:

Post a Comment