Thursday 4 March 2021

கல்யாணம்_பண்ணிப்பார்(1)

கல்யாணம்_பண்ணிப்பார் 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக அந்த காலத்தில் சொல்வார்கள். அதன் பொருள் முகமறியாத ஆணும் பெண்ணும் பெரியோர் நிச்சயித்தபடி அவர்களின் ஆசியுடன் மணம் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது சொர்க்கம்தான்!


அதன்பின் வந்த காலங்களில்..40, 45 வருடங்களுக்கு முன்பு..என் திருமணம் நடந்த சமயம் வரதட்சிணை முக்கியமாக இருந்ததால் திருமணங்கள் ரொக்கத்தில் முடிவாகின! 


அரசுவேலை மாப்பிள்ளைக்கு இவ்வளவு..பிஸினஸ் செய்பவருக்கு இவ்வளவு..வங்கி அதிகாரிக்கு இத்தனை என்று பணம்தான் அங்கு பிரதானமாக இருந்தது, மனித மனங்களை விட!


அப்பொழுதெல்லாம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால் பிள்ளை வீட்டார் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்த மாதிரி பேசுவார்கள்! இன்றோ அந்த நிலை தலைகீழாகி பெண்கள் தம் விருப்பத்தின்படி திருமணம் செய்ய விரும்புகிறார்கள்! அவர்களும் சம்பாதிப்பதால் ஆண்களிடம் வதுதட்சணை கேட்பதில்லை!


இவை இரண்டிலுமே கெட்ட பெயர் பெறுவது Revathi Balaji   சொல்வது போல பிள்ளை,  பெண்களின் அம்மாக்கள் மட்டுமே! அப்பாக்களாகிய ஆண்கள் இந்தக் கொடுக்கல் வாங்கலில் involve ஆகாமல் ஓரங்கட்டப்பட்டு கைகட்டி வாய் பொத்தி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!!


என் திருமணம் வரதட்சணை உச்சத்தில் இருந்த காலத்தில் நடந்த திருமணம். சிலர் தம் பிள்ளை ஜாதகத்துடன் வரதட்சணை நகை (வைரத்தோடு, வைர மூக்குத்தியுடன்)

 சீர் சாமான்கள் லிஸ்ட்டும் எழுதி அனுப்புவார்கள்! இதெல்லாம் பார்த்து எனக்கு வெறுத்து விட்டது. 


வரதட்சணை கேட்காத பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றேன் நான்! ஹ்ம்ம்..நடக்குமா அப்படி? அடுத்தவர் பணத்தில் அப்படி என்ன ஆசையோ? என் புக்ககத்தார் என் அப்பாவிடம

..உங்களுக்கு ஒரே பெண்தானே? அதனால் ஒரு கை🖐️ கொடுத்து

டுங்கோ..என்று கேட்டனர்!😃


அந்நாளில் என் அப்பாவின் சம்பளமே மூன்று இலக்கம்தான்! நான் ஒரே பெண். எனக்கு கீழே மூன்று தம்பிகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்நாளில் பெண்ணின் திருமணம் ஒரு கட்டாயக் கடமை என்பதால் என் அப்பா ஏதோ கடனெல்லாம் வாங்கி தன் கடமையை நிறைவேற்றினார்!! 


இந்தக் கால திருமணங்கள் சொர்க்கத்திலும் ரொக்கத்திலும் இல்லாமல் இருவரின் எண்ணங்களிலும்தான் நிச்சயிக்கப் படுகின்றன! 


கல்யாணம் பண்ணிக்(கொண்டு) பார்த்தாச்சு! இனி கல்யாணம் பண்ணிப் பார்த்த பதிவு தொடரும்😊


No comments:

Post a Comment