Thursday 9 July 2020

வெற்றிகள் தரும் வைகாசி விசாகம்..(4.6.2020)





இன்று முருகனின் வழிபாட்டுக்குரிய வைகாசி விசாகத் திருநாள். விசாக நட்சத்திரம் ஞானத்திற்குரிய  குருபகவானின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம். இந்த ஆண்டு குருவருள் நிறைந்த வியாழக்
கிழமையில் வருவது சிறப்பு.

ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவபெருமான், அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை காத்தருள விரும்பினார். அதன்படி தமது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.

அவை தேவர்களால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கையிலே கொண்டுபோய் சேர்த்தது.

சரவணப்பொய்கையில் சேர்ந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. இதுவே ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அது ஒரு வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர தினமாகும். எனவே தான் வைகாசி விசாகத்தில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு முருகன், சிவபெரு
மானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். இந்நன்னாளில் முருகப்
பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். ஞானமும், கல்வியும் பெருகும். பகை விலகும். பாசம் பெருகும். எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால், குலம் தழைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

அன்றைய தினம்  விநாயகப்
பெருமானை வழிபட்டு, வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படம்
வைத்து அதற்கு முன்னால்
ஐந்து முக விளக்கு ஏற்றி வைத்து, ஐந்துவித புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தை நிவேதித்து கந்த சஷ்டி கவச பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த நன்னாளில் முருகப் பெருமானை நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்லன யாவும் நடை பெறும்.
பசும் பால் அபிஷேகம்  ஆயுள் கூட்டும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்தால், பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் இனிய சந்ததிகளைத் தரும்.  எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், எம பயம் நீங்கும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால், மகிழ்ச்சியும் செல்வமும் கூடும்.திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், திக்கட்டும் புகழ் கிட்டும்.

சந்தன அபிஷேகம்  சரும நோய்களைத்  தீர்க்கும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேன் அபிஷேகம் செய்து பார்த்தால், தித்திக்கும் சங்கீதம் விருத்தி யாகும்.

வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் கிடைக்கும். மொத்தத்தில் வேண்டியதைப் பெற இந்நாள் மிகச் சிறப்பானதாகும்.

இன்று ஆலயங்கள் செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே விரதம் இருந்து வழிபட்டு உமையவளின் அழகு மகனிடம் இறையருளை வேண்டுவோம்.

No comments:

Post a Comment