Friday 4 June 2021

எனக்கு பிடித்த ஃபோட்டோ..

 




நம் குழந்தைகள் பிறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட நம் பேரன் பேத்திகள் பிறந்ததும் அவர்களைத் தூக்கிக் கொஞ்சும் மகிழ்ச்சிக்கு ஈடிணை கிடையாது. 


என் பெண் வயிற்றுப் பேரன் மும்பையில் பிறந்தபோது அவனை முதலில் தூக்கியவள் நான்தான்! அந்த மகிழ்ச்சிக்கு ஈடிணையேது? இன்றும் பாட்டி பாடாடி என்று சுற்றி வருவான். நான் செய்யும் ரசம், மைசூர்பாகு அவனுக்கு மிகவும் பிடிக்கும்.


அவன் பிறந்த நான்கு நாளில் எடுத்த புகைப்படமும், இன்று பதினைந்து வயதில் அவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் எனக்கு மிகப் பிடித்தவை!


ராதாபாலு

No comments:

Post a Comment