Thursday 25 February 2021

என் பேத்தி சொல்லும் ஸ்லோகம்

 என் பேத்தி ப்ரியங்கா மிக  அழகாக சுலோகங்களை சொல்வாள். தாம்பரம் சங்கரா க்ளோபல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இப்பொழுது online classes என்பதால் தினமும் அவள் டீச்சரோடு சேர்ந்து சுலோகம் சொல்வாள். நான் அவளை வீடியோ எடுக்கிறேன் என்றவுடன் டிரஸ் பண்ணிக் கொண்டு சுவாமி முன்பு அமர்ந்து சொன்னாள். சில வார்த்தைகள் மழலையாகவே இருக்கும்! 


அவள் 'ஸ்ருதி ஸ்மிருதி 

புராணானாம் ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்'

என்ற ஸ்லோகத்தை 'சங்கரம் குளோப சங்கரம்' என்பாள். நான் ..அது குளோப சங்கரம் இல்லை.லோக சங்கரம்னு சொல்லணும்..என்றபோது

 ..எங்க ஸ்கூல் பேரு சங்கரா க்ளோபல் ஸ்கூல்தான. அதைப் பத்திதான் இந்த ஸ்லோகம்..

என்றபோது எனக்கு சிரிப்பு வந்தது! ஆனால் அவளுடைய அந்த நம்பிக்கை, பள்ளியின் மேலிருந்த மதிப்பு என்னைக் கவர்ந்தது. ஒருவிதத்தில் லோகம், குளோப் இரண்டுமே உலகத்தைக் குறிப்பதுதானே! 


மத்யமர் அனந்த நாராயணனின் மார்கழி வைபவத்தில் ப்ரியங்காவுக்கு...ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம்...சொல்ல வாய்ப்பு கிடைத்தது.


இந்த மார்கழியில் நான் கோலம் போடவில்லை. பேத்தியோ தினமும்..நாம என்னிக்கு கோலம் போட்றது..என்று நச்சரித்து விட்டாள். மார்கழி ஆரம்ப முதலே மழை இங்கு விடாமல் பெய்ததால் நேற்று வீட்டுக்குள்ளேயே கோலம் போட்டேன். அவளும் கூடவே கலர் போட்டு அழகாக்க ஐடியாவெல்லாம் தருவாள்! 


Drawing, painting எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு. தன்னையே கதாபாத்திரமாக்கி அவள் பார்பி பொம்மைகளுடன் பேசி விளையாடுவது காணக் கண்கொள்ளா காட்சி!


கலரெல்லாம் போய் தூக்கிப் போடும் நிலையிலிருந்த யானைக்கு மிக அழகாக வண்ணம் தீட்டினாள். இப்பொழுது யானை புதுயானை ஆகிவிட்டது!


சமைக்கும்போதும் கூட வந்து ..நான் சப்பாத்தி பண்றேன். நான் தோசை வார்க்கிறேன் பாட்டி.. என்று எல்லாம் செய்வாள். அவள் செய்தவைகளை ரசித்து ருசித்து சாப்பிடுபவர் அவள் தாத்தா!


இன்றைய மெனு என் மருமகள் ஆர்த்தி கைவண்ணத்தில் Paneer Kofta Curryயுடன் சப்பாத்தி. அவள் ப்ரெட், கேக், பிஸ்கட் எல்லாம் மிக அருமையாக செய்வாள். அவள் செய்த பட்டர், சாக்லேட் குக்கீஸ்.

#ராதாபாலு

No comments:

Post a Comment